உம்மைத் தாகித்தல்
தாவீது யூதாவின் வனாந்தரத்தில் இருந்தபோது பாடின சங்கீதம்.
63 1 என் பிதாவே, நீரே என் பிதா; உம்மைத் தேடுகிறேன் என் முழு இருதயத்தோடும். என் ஆத்துமா தாகிக்கிறது உமக்காக, தண்ணீரில்லாத வறண்ட சோர்வுள்ள தேசத்தில் என் முழு சரீரமும் உம்மை வாஞ்சிக்கிறது. 2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மை நோக்கிப் பார்த்தேன், உம்முடைய வல்லமையையும் உம்முடைய மகிமையையும் கண்டேன். 3 உம்முடைய உடன்படிக்கை அன்பு ஜீவனிலும் மேலானதாயிருப்பதால், என் உதடுகள் உம்மைத் துதிக்கும். 4 இப்படியே நான் உயிரோடிருக்கும்வரை உம்மை ஸ்தோத்திரிப்பேன்; உம்முடைய நாமத்தில் என் கைகளை உயர்த்துவேன். 5 சிறந்த போஜனங்களால் திருப்தியடைவதுபோல் என் ஆத்துமா திருப்தியாகிறது, மகிழ்ச்சியான உதடுகளால் என் வாய் உம்மைத் துதிக்கிறது.
6 என் படுக்கையில் உம்மை நினைக்கும்போது, இரவின் நீண்ட ஜாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 7 நீர் எனக்குத் துணையாயிருந்தீர், உம்முடைய செட்டைகளின் நிழலிலே நான் கெம்பீரமாய்ப் பாடுகிறேன். 8 என் ஆத்துமா பற்றிக்கொள்ளுகிறது உம்மை; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். 10 அவர்கள் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். 11 ராஜாவோ எங்கள் பிதாவில் மகிழுவான்; எங்கள் பிதாவின்பேரில் ஆணையிடுகிற யாவரும் களிகூருவார்கள், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.