துன்மார்க்க அதிகாரிகள்
பிரதான வாத்தியக்காரனுக்கு: “அழிக்காதே” என்னும் ராகத்தில் அமைந்தது. தாவீதின் மிக்தாம் (பொற்பாடல்).
58 1 அதிகாரிகளே, நீங்கள் மெய்யாகவே நீதியானதைக் கட்டளையிடுகிறீர்களா? மனுமக்களை நீங்கள் நியாயமாய்த் தீர்ப்பிடுகிறீர்களா? a a v1 “அழிக்காதே” என்பது இந்தப் பாடல் பாடப்பட்ட ராகத்தின் பெயராகும். 2 இல்லை, உங்கள் இருதயங்களில் நீங்கள் அநியாயங்களைத் திட்டமிடுகிறீர்கள்; உங்கள் கைகள் தேசமெங்கும் கொடுமையைப் பரப்புகின்றன. 3 துன்மார்க்கர் கர்ப்பத்திலிருந்தே அந்நியப்பட்டவர்கள்; பிறந்ததுமுதல் அவர்கள் வழிதப்பி, பொய் பேசுகிறார்கள். 4 அவர்களுடைய விஷம் பாம்பின் விஷத்தைப்போலவும், தன் காதை அடைத்துக்கொள்ளும் செவிடான நாகத்தைப்போலவும் இருக்கிறது, 5 மந்திரவாதிகளின் சத்தத்தையும், தந்திரமான வித்தைக்காரனின் சத்தத்தையும் அது கேளாதபடிக்குமே. 6 எங்கள் பிதாவே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; பாலசிங்கங்களின் கோரைப்பற்களைப் பிடுங்கிப்போடும், எங்கள் பிதாவே! 7 ஓடிப்போகும் தண்ணீரைப்போல அவர்கள் அழிந்துபோகட்டும்; எங்கள் பிதா தம்முடைய அம்புகளைத் தொடுக்கும்போது, அவர்கள் வெட்டுண்டு போகட்டும். 8 ஊர்ந்து செல்லுகையில் கரைந்துபோகும் நத்தையைப்போலவும், செத்துப் பிறந்த குழந்தையைப்போலவும், சூரியனை ஒருபோதும் காணாதவர்களாய் அவர்கள் ஆவார்கள். 9 உங்கள் பானைகள் முட்செடிகளின் வெப்பத்தை உணருமுன்னே, அவை பசுமையாயிருந்தாலும் எரிந்தாலும், அவர் அவர்களை அடித்து வாரிக்கொண்டுபோவார். 10 நீதிமான்கள் மகிழ்ச்சியடைவார்கள் நியாயம் நிறைவேறுவதைக் காணும்போது; அவர்கள் தங்கள் பாதங்களை துன்மார்க்கருடைய இரத்தத்தில் கழுவுவார்கள். 11 அப்பொழுது மக்கள் சொல்வார்கள், “நிச்சயமாக நீதிமான்களுக்கு ஒரு பலன் உண்டு; நிச்சயமாக எங்கள் பிதா பூமியை நியாயந்தீர்க்கிறார்.”