மூடனின் மறுதலிப்பு
பாடகர் தலைவனுக்கு. தாவீதின் சங்கீதம்.
14 1 மூடன் தன் இருதயத்தில் சொல்லுகிறான், “தேவன் இல்லை.” அவர்கள் கெட்டுப்போனார்கள், அவர்களுடைய செய்கைகள் அருவருப்பானவை; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 எங்கள் பிதா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கிறார் உணர்வுள்ளவன் எவனாகிலும் உண்டோ என்று பார்க்கும்படி, மனுபுத்திரரை நோக்கி, தம்மைத் தேடுகிறவன் எவனாகிலும் உண்டோ என்று. 3 எல்லாரும் வழிவிலகிப்போனார்கள்; ஒருமிக்கக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4 அப்பத்தைப் புசிப்பதுபோல் என் ஜனத்தை விழுங்குகிற இந்த அக்கிரமக்காரர் யாவரும் ஒன்றும் அறியாதிருக்கிறார்களோ? அவர்கள் எங்கள் பிதாவை ஒருபோதும் நோக்கிக் கூப்பிடுகிறதில்லை. 5 அங்கே அவர்கள் மகா பயத்தால் அதிர்ந்துபோனார்கள், எங்கள் பிதா நீதிமான்களின் சந்ததியோடே இருக்கிறபடியால். 6 அக்கிரமக்காரராகிய நீங்கள் சிறுமையானவனுடைய ஆலோசனையை வீணாக்கப் பார்க்கிறீர்கள், ஆனாலும் எங்கள் பிதாவே அவனுடைய அடைக்கலம்.
7 இஸ்ரவேலின் இரட்சிப்பு சீயோனிலிருந்து வந்தால் எத்தனை நலமாயிருக்கும்! எங்கள் பிதா தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பை மாற்றும்போது, யாக்கோபு களிகூருவானாக, இஸ்ரவேல் மகிழ்வானாக.