பரலோகத்தை நோக்கி ஏறெடுக்கப்பட்ட கண்கள்
ஆரோகண பாட்டு.
123 1 உம்மிடத்தில் நான் என் கண்களை ஏறெடுக்கிறேன், வானங்களில் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே. 2 இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்கிறதுபோலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமானியின் கையை நோக்கியிருக்கிறதுபோலவும், எங்கள் பிதா எங்களுக்கு இரங்கும்வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3 எங்களுக்கு இரங்கும், எங்கள் பிதாவே, எங்களுக்கு இரங்கும், ஏனெனில் நாங்கள் நிந்தையால் மிகுதியும் நிரப்பப்பட்டிருக்கிறோம். 4 சுகமாய் வாழ்கிறவர்களின் பரியாசத்தினால் எங்கள் ஆத்துமா மிகுதியும் நிரப்பப்பட்டிருக்கிறது, அகந்தையுள்ளவர்களின் நிந்தையினாலும்.