உண்மையான உபவாசம், உண்மையான உண்மைத்தன்மை
7 1தரியு ராஜாவின் நான்காம் ஆண்டிலே, ஒன்பதாம் மாதமாகிய கிஸ்லேயு மாதத்தின் நான்காம் நாளிலே, எங்கள் பிதாவின் வார்த்தை சகரியாவுக்கு உண்டாயிற்று. 2எங்கள் பிதாவின் தயவை மன்றாடிக் கேட்கும்படி, பெத்தேல் ஊரார் சரேத்சேரையும் ரெகெம்மெலேகையும் அவர்களுடைய மனுஷரையும் அனுப்பினார்கள்; 3பரலோக சேனைகளின் பிதாவினுடைய ஆலயத்தின் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி, “நான் இத்தனை வருஷமாய்ச் செய்துவந்ததுபோல, ஐந்தாம் மாதத்திலே அழுது, என்னைப் பிரித்து உபவாசம் பண்ணவேண்டுமோ?” என்று கேட்கும்படி அனுப்பினார்கள்.
4அப்பொழுது பரலோக சேனைகளின் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாயிற்று:
5தேசத்தினுடைய சகல ஜனங்களையும் ஆசாரியர்களையும் நோக்கி நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த எழுபது வருஷமாக நீங்கள் ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது, நீங்கள் உண்மையாய் எனக்கென்று உபவாசம்பண்ணினீர்களா? a a v5 ஐந்தாம் மாத உபவாசம் பாபிலோன் சாலொமோனின் ஆலயத்தை எரித்ததை நினைவுகூர்ந்தது; ஏழாம் மாத உபவாசம் யூதாவின் கடைசி அதிபதியாகிய கெதலியாவின் கொலையை நினைவுகூர்ந்தது. 6நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும், உங்களுக்கென்றல்லவோ நீங்கள் புசித்துக் குடிக்கிறீர்கள்?
7எருசலேமும் அதைச் சுற்றியிருந்த பட்டணங்களும் குடியேற்றப்பட்டு சமாதானமாயிருந்தபோதும், தென்தேசமும் சமபூமியும் குடியேற்றப்பட்டிருந்தபோதும், எங்கள் பிதா முந்தின தீர்க்கதரிசிகள் மூலமாய்ச் சொன்ன வார்த்தைகள் இவைகள்தானல்லவா?
8மேலும் எங்கள் பிதாவின் வார்த்தை சகரியாவுக்கு உண்டாயிற்று:
9பரலோக சேனைகளின் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: உண்மையான நியாயத்தீர்ப்புச் செய்யுங்கள்; அவனவன் தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் காட்டுங்கள். 10விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் ஏழையையும் ஒடுக்காதேயுங்கள்; ஒருவரும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்திலே தீங்கு நினையாதேயுங்கள்.
11ஆனாலும் அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமல், முரண்டாய்த் தங்கள் முதுகைத் திருப்பி, கேளாதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள். 12பரலோக சேனைகளின் பிதா தமது ஆவியினாலே முந்தின தீர்க்கதரிசிகள் மூலமாய் அனுப்பின வேதப்பிரமாணத்தையும் வார்த்தைகளையும் கேளாதபடிக்கு, அவர்கள் தங்கள் இருதயத்தை வைரக்கல்லைப்போலக் கடினப்படுத்திக்கொண்டார்கள். ஆகையால் பரலோக சேனைகளின் பிதாவினிடத்திலிருந்து மகா கோபம் உண்டாயிற்று.
13“நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாமற்போனதுபோல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாதேபோனேன்” என்று பரலோக சேனைகளின் பிதா சொல்லுகிறார். 14அவர்கள் அறியாத எல்லா ஜாதிகளுக்குள்ளும் நான் அவர்களைப் பெருங்காற்றினால் சிதறடித்தேன். அவர்களுக்குப் பின்னாக அந்த தேசம் பாழாய் விடப்பட்டது; போக்கும் வரத்துமாய்க் கடந்துபோகிறவன் ஒருவனும் இல்லாமற்போனான். இப்படியாக அவர்கள் அந்த இன்பமான தேசத்தைப் பாழ்நிலமாக்கினார்கள்.