இளைப்பாறுகிற ஒரு பிள்ளை
ஆரோகணப் பாடல். தாவீதுடையது.
131 1 என் பிதாவே, என் இருதயம் அகந்தை கொள்ளவில்லை, என் கண்கள் மேட்டிமையாய்ப் பார்க்கவில்லை; எனக்கு மிகப் பெரிதும் அதிசயமுமான காரியங்களில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. 2 மெய்யாகவே, நான் என் ஆத்துமாவை அமர்த்தி அமைதிப்படுத்தினேன், தாய்ப்பாலை மறந்த பிள்ளை தன் தாயோடிருப்பதுபோல; தாய்ப்பாலை மறந்த பிள்ளையைப்போலவே என் ஆத்துமா என்னில் இருக்கிறது. 3 இஸ்ரவேலே, இதுமுதல் என்றென்றைக்கும் எங்கள் பிதாவின்மேல் உன் நம்பிக்கையை வை.