மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல்
12 1மோசே திருமணம் செய்திருந்த கூஸ் தேசத்துப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசினார்கள்—அவன் ஒரு கூஸ் தேசத்துப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். 2அவர்கள்: “எங்கள் பிதா மோசேயின் மூலமாய் மாத்திரமா பேசியிருக்கிறார்? எங்கள் மூலமாயும் அவர் பேசவில்லையா?” என்றார்கள். எங்கள் பிதா அதைக் கேட்டார்.
3மோசே என்னும் அந்த மனிதனோ, பூமியின் மேலுள்ள எல்லா மனிதரையும்விட மிகவும் சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
4உடனே எங்கள் பிதா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: “நீங்கள் மூவரும் சபைக்கூடாரத்துக்கு வெளியே வாருங்கள்” என்றார். அந்த மூவரும் வெளியே வந்தார்கள்.
5அப்பொழுது எங்கள் பிதா மேகத்தூணில் இறங்கிவந்து, கூடாரவாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன்வந்தார்கள்.
6அவர்: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி இருந்தால், உங்கள் பிதாவாகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். 7என் ஊழியக்காரனாகிய மோசேயின் விஷயத்தில் அப்படியல்ல; அவன் என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். 8நான் அவனோடே மறைபொருள்களாய் அல்ல, முகமுகமாய்த் தெளிவாய்ப் பேசுகிறேன், அவன் எங்கள் பிதாவின் ரூபத்தைக் காண்கிறான். அப்படியிருக்க, என் ஊழியக்காரனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு நீங்கள் ஏன் பயப்படவில்லை?”
9எங்கள் பிதாவின் கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
10மேகம் கூடாரத்தைவிட்டு நீங்கினபோது, இதோ, மிரியாம் தொழுநோயால் உறைந்த மழையைப்போல் வெண்மையாயிருந்தாள். ஆரோன் மிரியாமை நோக்கிப் பார்த்தான்; இதோ, அவள் தொழுநோயாயிருந்தாள். 11அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “ஐயையோ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய் நடந்து செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். 12தன் தாயின் கர்ப்பத்திலிருந்து புறப்படுகையில் பாதி மாம்சம் அழிந்துபோன செத்த சிசுவைப்போல் அவள் ஆகாதபடி செய்யும்” என்றான்.
13அப்பொழுது மோசே எங்கள் பிதாவை நோக்கி: “ஐயையோ, என் பிதாவே, அவளைத் தயவாய்க் குணமாக்கும்” என்று கூப்பிட்டான்.
14எங்கள் பிதா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவள் முகத்தில் காறித்துப்பியிருந்தால், அவள் ஏழுநாள் வெட்கப்படமாட்டாளா? ஏழுநாள் அவள் பாளயத்துக்கு வெளியே அடைக்கப்பட்டிருக்கட்டும்; பின்பு திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவாள்” என்றார்.
15அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு வெளியே அடைக்கப்பட்டிருந்தாள்; அவள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும்வரை ஜனங்கள் பயணம் செய்யவில்லை. 16அதற்குப்பின் ஜனங்கள் ஆஸெரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்.