எருசலேமின் வாசல்களில் காவலர்கள் நியமிக்கப்படுதல்
7 1மதில் மறுபடியும் கட்டப்பட்டு, நான் கதவுகளை நிறுவின பிறகு, வாசல் காவலர்களும், பாடகர்களும், லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2எருசலேமின் பொறுப்பை என் சகோதரனாகிய அனானியிடமும், கோட்டையின் தலைவனாகிய அனனியாவிடமும் ஒப்படைத்தேன்; ஏனென்றால் அவன் உண்மையுள்ளவனாயும், அநேகரைப் பார்க்கிலும் அதிகமாய் எங்கள் பிதாவுக்குப் பயந்தவனாயும் இருந்தான். 3நான் அவர்களை நோக்கி: “வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்களைத் திறக்கவேண்டாம்; காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கும்போதே, கதவுகளைப் பூட்டித் தாழ்ப்பாள் போடுங்கள். எருசலேமில் குடியிருக்கிறவர்களில் காவலர்களை நியமியுங்கள்; ஒவ்வொருவனும் தன் காவல்நிலையிலும், ஒவ்வொருவனும் தன் சொந்த வீட்டுக்கு எதிராகவும் இருக்கட்டும்” என்றேன்.
4நகரம் விசாலமும் பெரிதுமாய் இருந்தது, ஆனால் அதிலிருந்த மக்கள் சிலரே; வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.
பிதாவின் மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பி எண்ணப்படுதல்
5அப்பொழுது பிரபுக்களையும், அதிகாரிகளையும், மக்களையும் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யும்படி கூட்டிச்சேர்க்கிற எண்ணத்தை என் பிதா என் இருதயத்தில் வைத்தார். முதலில் திரும்பிவந்தவர்களின் வம்சவரலாற்றுப் பதிவேட்டைக் கண்டேன்; அதில் எழுதப்பட்டிருந்ததாவது:
6பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைப்பிடித்துக் கொண்டுபோயிருந்த சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த, எருசலேமுக்கும் யூதாவுக்கும், அவரவர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச்சென்ற இந்த மாகாணத்து மக்கள் யாரெனில்: 7செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நாகமானி, மொர்தெகாய், பில்ஷான், மிஸ்பேரேத், பிக்வாய், நேகூம், பானா ஆகியோருடன் வந்தவர்கள்; இஸ்ரவேல் மக்களாகிய ஆண்களின் எண்ணிக்கை:
8பாரோஷின் வம்சத்தார், 2,172;
9செபத்தியாவின் வம்சத்தார், 372;
10ஆராகின் வம்சத்தார், 652;
11பாகாத்மோவாபின் வம்சத்தார் (யெசுவா யோவாப் என்பவர்களின் வழியாக), 2,818;
12ஏலாமின் வம்சத்தார், 1,254;
13சத்தூவின் வம்சத்தார், 845;
14சக்காயின் வம்சத்தார், 760;
15பின்னூயின் வம்சத்தார், 648;
16பெபாயின் வம்சத்தார், 628;
17அஸ்காதின் வம்சத்தார், 2,322;
18அதோனிகாமின் வம்சத்தார், 667;
19பிக்வாயின் வம்சத்தார், 2,067;
20ஆதீனின் வம்சத்தார், 655;
21ஆத்தேரின் வம்சத்தார் (எசேக்கியாவின் வழியாக), 98;
22ஆசூமின் வம்சத்தார், 328;
23பேசாயின் வம்சத்தார், 324;
24ஆரீப்பின் வம்சத்தார், 112;
25கிபியோனின் வம்சத்தார், 95.
26பெத்லகேம், நெத்தோபா ஊர்களின் ஆண்கள், 188;
27ஆனதோத்தின் ஆண்கள், 128;
28பெத்அஸ்மாவேத்தின் ஆண்கள், 42;
29கீரியாத்யெயாரீம், கெப்பீரா, பெயரோத் ஊர்களின் ஆண்கள், 743;
30ராமா, கேபா ஊர்களின் ஆண்கள், 621;
31மிக்மாஸின் ஆண்கள், 122;
32பெத்தேல், ஆயி ஊர்களின் ஆண்கள், 123;
33மற்ற நேபோவின் ஆண்கள், 52.
34மற்ற ஏலாமின் வம்சத்தார், 1,254;
35ஆரீமின் வம்சத்தார், 320;
36எரிகோவின் வம்சத்தார், 345;
37லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார், 721;
38சேனாவின் வம்சத்தார், 3,930.
39ஆசாரியர்கள்: யெதாயாவின் வம்சத்தார் (யெசுவாவின் குடும்பத்தின் வழியாக), 973.
40இம்மேரின் வம்சத்தார், 1,052;
41பஸ்கூரின் வம்சத்தார், 1,247;
42ஆரீமின் வம்சத்தார், 1,017.
43லேவியர்கள்: யெசுவாவின் வம்சத்தார் (கத்மியேல் வழியாகவும், ஓதேவாவின் வம்சத்தின் வழியாகவும்), 74.
44பாடகர்கள்: ஆசாப்பின் வம்சத்தார், 148.
45வாசல் காவலர்கள்: சல்லூம், ஆத்தேர், தல்மோன், அக்கூப், ஆத்திதா, சோபாய் என்பவர்களின் வம்சத்தார், 138.
46ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தார், அசூப்பாவின் வம்சத்தார், தபாயோத்தின் வம்சத்தார், 47கேரோஸ், சீயா, பாதோன், 48லெபனா, ஆகாபா, சல்மாய், 49ஆனான், கீதேல், காகார், 50ரெயாயா, ரேத்சீன், நெகோதா, 51காசாம், ஊசா, பசேயா, 52பேசாய், மெயூனீம், நெப்புசேசீம், 53பக்பூக், ஆகுப்பா, அர்கூர், 54பஸ்லீத், மெகீதா, அர்சா, 55பர்கோஸ், சிசெரா, தேமா, 56நேசியா, ஆத்திப்பா ஆகியோரின் வம்சத்தார்.
57சாலொமோனுடைய ஊழியக்காரரின் வம்சத்தார்: சோத்தாய், சோப்பேரேத், பெரிதா, 58யாலா, தர்கோன், கீதேல், 59செபத்தியா, அத்தீல், பொகெரேத்ஹஸ்செபாயீம், ஆமோன் ஆகியோரின் வம்சத்தார். 60ஆலயப் பணியாளர்களும் சாலொமோனுடைய ஊழியக்காரரின் வம்சத்தாரும் எல்லாருமாய் 392 பேர்.
61தேல்மேலா, தேல்அர்சா, கேருப், அதோன், இம்மேர் என்னும் இடங்களிலிருந்து வந்தவர்கள் இவர்களே; ஆனால் இவர்கள் தாங்கள் இஸ்ரவேலரா என்பதைத் தங்கள் தகப்பன் குடும்பத்தையாவது, வம்சாவளியையாவது காண்பிக்கக் கூடாதிருந்தார்கள்:
62தெலாயா, தொபியா, நெகோதா ஆகியோரின் வம்சத்தார், 642.
63ஆசாரியரிலோ: ஒபாயா, அக்கோஸ், பர்சிலாய் ஆகியோரின் வம்சத்தார்; இந்தப் பர்சிலாய் கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை மணந்து, அந்தக் குடும்பத்தின் பெயரால் அழைக்கப்பட்டான்.
64இவர்கள் தங்கள் வம்சவரலாற்றுப் பதிவுகளைத் தேடியும் காணாதபடியால், தீட்டுள்ளவர்களாக எண்ணப்பட்டு ஆசாரிய ஊழியத்திலிருந்து நீக்கப்பட்டார்கள். 65ஊரீம், தும்மீம் என்பவைகளால் விசாரிக்க ஒரு ஆசாரியன் எழும்பும்வரைக்கும் இவர்கள் மகா பரிசுத்தமான உணவைப் புசிக்கவேண்டாம் என்று அதிபதி அவர்களுக்குச் சொன்னான். a a v65 ஊரீம், தும்மீம் என்பவை பிரதான ஆசாரியனால் வைத்திருக்கப்பட்ட பரிசுத்த பொருள்கள்; கடினமான காரியங்களில் தேவனிடமிருந்து தெளிவான தீர்மானத்தை அறியும்படி இவை பயன்படுத்தப்பட்டன.
66சபையார் எல்லாருமாய் 42,360 பேர். 67இது தவிர அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாகிய 7,337 பேரும், அவர்களுக்குப் பாடகர்களும் பாடகிகளுமாகிய 245 பேரும் இருந்தார்கள். 68அவர்களுக்கு 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 69435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
70குடும்பத் தலைவர்களில் சிலர் இந்த வேலைக்குக் கொடுத்தார்கள். அதிபதி பொக்கிஷத்திற்கு 1,000 பொற்காசுகளையும், 50 கிண்ணங்களையும், 530 ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தான். 71குடும்பத் தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 பொற்காசுகளையும், ஏறக்குறைய 2,750 இராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72மற்ற மக்கள் 20,000 பொற்காசுகளையும், ஏறக்குறைய 2,500 இராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
73ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலயப் பணியாளர்களும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் ஊர்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதத்தில் இஸ்ரவேல் மக்கள் தங்கள் ஊர்களில் இருந்தார்கள்.