இயேசு சகேயுவைத் தேடி இரட்சிக்கிறார்
19 1இயேசு எரிகோவுக்குள் பிரவேசித்து, அதின் வழியாகக் கடந்துபோனார். 2சகேயு என்னும் பேருள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் தலைமை ஆயக்காரனாயும் ஐசுவரியவானாயும் இருந்தான். 3இயேசு யார் என்று பார்க்க அவன் விரும்பினான், ஆனால் அவன் குள்ளனாயிருந்தபடியால் ஜனக்கூட்டத்தின் நிமித்தம் பார்க்கக்கூடாமல் இருந்தான். 4இயேசு அந்த வழியாய்க் கடந்துபோகவிருந்தபடியால், அவரைப் பார்க்கும்படி அவன் முன்னாக ஓடி, ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5இயேசு அவ்விடத்தை அடைந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: “சகேயுவே, சீக்கிரமாய் இறங்கிவா, இன்று நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை ஏற்றுக்கொண்டான். 7இதைக் கண்ட யாவரும்: “இவர் பாவியான ஒரு மனிதனிடத்தில் தங்கப்போனாரே” என்று முறுமுறுத்தார்கள்.
8சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: “ஆண்டவரே, இதோ, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்; நான் எவனிடத்திலாகிலும் அநியாயமாய் எதையாவது வாங்கியிருந்தால், நாலுமடங்காகத் திரும்பச் செலுத்துகிறேன்” என்றான்.
9அப்பொழுது இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமின் குமாரனாயிருக்கிறானே. 10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் மனுஷகுமாரன் வந்தார்” என்றார்.
உண்மையுள்ள ஊழியக்காரர் ராஜாவுக்காகக் காத்திருக்கிறார்கள்
11அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபமாயிருந்தபடியினாலும், எங்கள் பிதாவின் ராஜ்யம் உடனே வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையையும் சொன்னார்.
12ஆகையால் அவர்: “உயர்குலத்தானாகிய ஒரு மனிதன் தனக்கு ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போனான். 13அவன் தன் ஊழியக்காரர் பத்துப்பேரை அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஏறக்குறைய மூன்று மாத சம்பளத்துக்குச் சமமான பணத்தைக் கொடுத்து: ‘நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள்’ என்றான். 14அவனுடைய நகரத்தார் அவனைப் பகைத்து: ‘இவன் எங்கள்மேல் அரசாளுகிறது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லும்படி அவனுக்குப் பின்னாலே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
15“அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தான் பணங்கொடுத்திருந்த ஊழியக்காரர் அவரவர் என்ன சம்பாதித்தார்களென்று அறியும்படி அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச்சொன்னான். 16முதலாவது வந்தவன்: ‘ஆண்டவரே, உம்முடைய பணம் பத்துமடங்கு சம்பாதித்தது’ என்றான்.”
17“அதற்கு அவன்: ‘நல்லது, உத்தம ஊழியக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையாயிருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு’ என்றான்.”
18“இரண்டாவது வந்தவன்: ‘ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்த பணம் ஐந்துமடங்கு சம்பாதித்தது’ என்றான்.”
19“அதற்கு அவன்: ‘நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு’ என்றான்.”
20“பின்பு வேறொருவன் வந்து: ‘ஆண்டவரே, இதோ, உம்முடைய பணம்; இதை ஒரு துணியிலே கட்டிவைத்திருந்தேன்; 21ஏனெனில் நீர் கடினமான மனிதன்; நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமாயிருக்கிறீர்; ஆகையால் உமக்குப் பயந்திருந்தேன்’ என்றான்.”
22அதற்கு அவன்: “பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமாகிய கடினமான மனிதன் என்று அறிந்திருந்தாயே? 23அப்படியிருந்தும், நீ என் பணத்தை ஏன் காசுநிலையத்தில் வைக்கவில்லை? அப்படிச்செய்திருந்தால் நான் திரும்பிவந்தபோது அதை வட்டியோடே வாங்கியிருப்பேனே’ என்று சொல்லி, 24அருகே நின்றவர்களை நோக்கி: ‘அவனிடத்திலிருக்கிற பணத்தை எடுத்து, பத்துமடங்கு உடையவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.”
25“அதற்கு அவர்கள்: ‘ஆண்டவரே, அவனுக்குப் பத்துமடங்கு இருக்கிறதே’ என்றார்கள். 26‘உள்ளவனெவனுக்கும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்தோ உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27என்னை அரசாளவேண்டாமென்று மறுத்த என் பகைஞராகிய அவர்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள்’ என்றான்” என்றார்.
குமாரன் ராஜாவாக எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார்
28இவைகளை அவர் சொன்னபின்பு, எருசலேமுக்கு ஏறிப்போகும்படி முன்னே நடந்துபோனார்.
29அவர் ஒலிவமலையருகிலுள்ள பெத்பகேக்கும் பெத்தானியாவுக்கும் சமீபமாய் வந்தபோது, சீஷர்களில் இரண்டுபேரை அழைத்து: 30“உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசிக்கும்போது, ஒருவனும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். 31ஒருவன் உங்களை: ‘இதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்கு வேண்டியிருக்கிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32அனுப்பப்பட்டவர்கள் போய், அவர் தங்களுக்குச் சொன்னபடியே கண்டார்கள். 33அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கும்போது, அதின் எஜமான்கள் அவர்களை நோக்கி: “கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்றார்கள். 34அதற்கு அவர்கள்: “இது கர்த்தருக்கு வேண்டியிருக்கிறது” என்றார்கள். 35அதை அவர்கள் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களைக் கழுதைக்குட்டியின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். 36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். 37அவர் ஒலிவமலையின் இறக்கத்திற்குச் சமீபமாய் வந்தபோது, சீஷர்களின் கூட்டமெல்லாம் தாங்கள் கண்ட சகல அற்புதங்களுக்காகவும் சந்தோஷப்பட்டு, உரத்த சத்தமாய் எங்கள் பிதாவைத் துதிக்கத் தொடங்கி: 38என்று சொல்லி, “எங்கள் பிதாவின் நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்! பரலோகத்தில் சமாதானமும் உன்னதத்தில் மகிமையும் உண்டாவதாக!”
39அப்பொழுது ஜனக்கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: “போதகரே, உம்முடைய சீஷர்களைக் கடிந்துகொள்ளும்” என்றார்கள்.
40அவர் பிரதியுத்தரமாக: “இவர்கள் மவுனமாயிருந்தால், கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
41அவர் சமீபமாய் வந்து நகரத்தைப் பார்த்து, அதற்காக அழுது:
42“உனக்குச் சமாதானத்தைத் தரும் காரியங்களை நீ இன்றைக்காகிலும் அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்! ஆனால் இப்பொழுது அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 43ஏனெனில் உன் சத்துருக்கள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கும் நாட்கள் உனக்கு வரும்; 44அவர்கள் உன்னையும் உன் மதில்களுக்குள்ளிருக்கிற உன் பிள்ளைகளையும் தரையாக்கி, உன்னிடத்தில் கல்லின்மேல் கல்லிராதபடிக்குச் செய்வார்கள்; ஏனெனில் உன் சந்திப்பின் காலத்தை நீ அறியாமற்போனாய்” என்றார். a a v44 ‘உன் சந்திப்பின் காலம்’ என்பது இயேசுவின் மூலமாய்த் தேவன் எருசலேமுக்கு வந்த காலத்தைக் குறிக்கிறது.
இயேசு தம்முடைய பிதாவின் ஆலயத்தைச் சுத்திகரிக்கிறார்
45பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்றுக்கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கி,
46அவர்களை நோக்கி: “‘என் வீடு ஜெபவீடாயிருக்கும்’ என்று வேதத்தில் எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார்.
47அவர் நாள்தோறும் தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனங்களின் தலைவரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; 48ஆனாலும் ஜனங்களெல்லாரும் அவருடைய வார்த்தைகளை ஆவலோடே கேட்டுக்கொண்டிருந்தபடியால், அவர்கள் ஒன்றும் செய்யக் காணாதிருந்தார்கள்.