எங்கள் பிதாவுக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லை
12 1அதற்குள் ஆயிரக்கணக்கானோர் ஒருவரையொருவர் மிதிக்கும்படி நெருக்கிக்கூடியிருக்கையில், இயேசு முதலில் தம்முடைய சீஷர்களை நோக்கி: “பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து, அதாவது மாயத்தனத்தைக்குறித்து, எச்சரிக்கையாயிருங்கள். 2வெளிப்படுத்தப்படாத மறைவானது ஒன்றுமில்லை, அறியப்படாத மறைபொருளும் ஒன்றுமில்லை. 3ஆகையால் நீங்கள் இருளிலே சொன்னதெல்லாம் வெளிச்சத்திலே கேட்கப்படும், அறைகளுக்குள்ளே இரகசியமாய்ச் சொன்னது வீட்டின்மேல் நின்று அறிவிக்கப்படும்.
4“என் சிநேகிதரே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொன்று, பின்பு அதற்கு அதிகமாய் ஒன்றும் செய்யக்கூடாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 5நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொன்றபின்பு நரகத்திலே தள்ள அதிகாரமுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6ஐந்து அடைக்கலான் குருவிகள் இரண்டு சிறு காசுக்கு விற்கப்படுகிறதில்லையா? ஆயினும் அவைகளில் ஒன்றாகிலும் எங்கள் பிதாவுக்கு முன்பாக மறக்கப்படுவதில்லை. a a v6 அசாரியோன் என்பது சிறிதளவு மதிப்புள்ள ஒரு சிறு செப்புக்காசு—அவைகளில் இரண்டு ஐந்து குருவிகளை வாங்கின. 7உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது; ஆகையால் பயப்படாதிருங்கள்; அநேகம் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
8“அன்றியும், மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிற எவனையும் மனுஷகுமாரனும் எங்கள் பிதாவின் தூதர்கள் முன்பாக அறிக்கைபண்ணுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவனோ எங்கள் பிதாவின் தூதர்கள் முன்பாக மறுதலிக்கப்படுவான். 10மனுஷகுமாரனுக்கு விரோதமாக ஒரு வார்த்தை சொல்லுகிற எவனும் மன்னிக்கப்படுவான்; ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தூஷணஞ்சொல்லுகிறவனோ மன்னிக்கப்படமாட்டான். 11அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்கும், அதிகாரிகளுக்கும், அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாகக் கொண்டுபோகும்போது, எப்படி, என்ன உத்தரவு சொல்லுவோம், என்ன பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள்; 12ஏனெனில் நீங்கள் சொல்லவேண்டியதை பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலேயே உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
எங்கள் பிதாவை மறந்த மதியீனன்
13அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: “போதகரே, சுதந்தரத்தை என்னோடே பங்கிடும்படி என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
14அதற்கு இயேசு அவனை நோக்கி: “மனுஷனே, என்னை உங்கள்மேல் நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் நியமித்தவன் யார்?” என்றார். 15பின்பு அவர் அவர்களை நோக்கி: “ஜாக்கிரதையாயிருங்கள்; சகலவித பொருளாசைக்கும் விலகியிருங்கள்; ஏனெனில் ஒருவனுடைய ஜீவனானது அவனுக்கு எவ்வளவு உடைமைகள் இருந்தாலும் அவைகளால் உண்டாகிறதல்ல” என்றார்.
16அன்றியும் அவர் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: “ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17அவன் தனக்குள்ளே சிந்தித்து: ‘நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்க எனக்கு இடமில்லையே’ என்றான். 18பின்பு அவன்: ‘நான் இப்படிச் செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்து, பெரியவைகளைக் கட்டி, என் தானியத்தையும் என் பொருள்களையும் எல்லாம் அங்கே சேர்த்துவைப்பேன்; 19பின்பு என் ஆத்துமாவை நோக்கி: ஆத்துமாவே, அநேக வருஷங்களுக்கு உனக்குத் திரளான பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; இளைப்பாறு, புசி, குடி, சந்தோஷமாயிரு என்று சொல்லுவேன்’ என்றான்.
20ஆனால் எங்கள் பிதா அவனை நோக்கி: ‘மதியீனனே, உன் ஆத்துமா இந்த இராத்திரியில் உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்; அப்பொழுது நீ சேர்த்துவைத்தவைகள் யாருடையதாகும்?’ என்றார். 21தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைத்து, எங்கள் பிதாவினிடத்தில் ஐசுவரியவானாயிராதவன் யாவனுக்கும் இப்படியே சம்பவிக்கும்” என்றார்.
உங்களுக்கு என்ன தேவை என்பதை எங்கள் பிதா அறிவார்
22பின்பு இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுத்துவோம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். 23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடுப்பைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. 24காக்கைகளைக் கவனித்துப்பாருங்கள்: அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை; அவைகளுக்குப் பண்டகசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை; ஆயினும் எங்கள் பிதா அவைகளைப் பிழைப்பூட்டுகிறார். பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்கள்! 25கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் ஆயுசுக்கு ஒரு மணிநேரத்தைக் கூட்டுவான்? 26இப்படிப்பட்ட மிகச்சிறிய காரியத்தையும் செய்யக்கூடாதவர்களாயிருக்க, மற்றவைகளுக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்? 27லீலிபுஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்: அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; ஆயினும் சாலொமோன் தன்னுடைய எல்லா மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28இன்று வயலிலிருந்து, நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லை எங்கள் பிதா இவ்விதமாய் உடுத்துவித்தால், அற்பவிசுவாசிகளே, அவர் உங்களை எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்?
29என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று தேடாதிருங்கள், கலங்காமலும் இருங்கள். 30இவைகளையெல்லாம் உலகத்திலுள்ள ஜாதிகளெல்லாம் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதா அறிந்திருக்கிறார். 31இதற்குப் பதிலாக, எங்கள் பிதாவின் ராஜ்யத்தைத் தேடுங்கள்; அப்பொழுது இவைகளும் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32“பயப்படாதே, சிறுமந்தையே; உங்களுக்கு ராஜ்யத்தைத் தந்தருள உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். 33உங்களுக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடுங்கள். பழமையாய்ப் போகாத பணப்பைகளையும், குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்கு உண்டாக்கிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பொட்டுப்பூச்சி கெடுக்கிறதுமில்லை. 34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
எஜமான் திரும்பிவரும்போது ஆயத்தமாயிருங்கள்
35“உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும் ஆயத்தமாயிருங்கள்; 36தங்கள் எஜமான் கலியாண விருந்திலிருந்து திரும்பிவருகையில், அவர் வந்து தட்டும்போது உடனே கதவைத் திறக்கும்படி காத்திருக்கிற ஊழியக்காரரைப்போல் இருங்கள். 37எஜமான் வரும்போது எந்த ஊழியக்காரர் விழித்திருக்கக் காண்கிறாரோ அந்த ஊழியக்காரர் பாக்கியவான்கள்; அவர் தாமே அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அவர்களுக்குப் பணிவிடை செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது, மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படி ஆயத்தமாயிருக்கக் காண்பாரானால், அந்த ஊழியக்காரர் பாக்கியவான்கள். 39வீட்டெஜமான் திருடன் வருகிற வேளையை அறிந்திருந்தால், அவன் தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிந்துகொள்ளுங்கள். 40நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; நீங்கள் நினையாத வேளையில் மனுஷகுமாரன் வருவார்” என்றார்.
41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குச் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ?” என்றான்.
42அதற்குக் கர்த்தர்: “தன் வேலைக்காரருக்கு ஏற்றநேரத்தில் படிதானியம் கொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் விசாரணைக்காரனாக வைக்கிற உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்? 43எஜமான் வரும்போது எந்த ஊழியக்காரன் இப்படிச் செய்கிறவனாய்க் காணப்படுகிறானோ அந்த ஊழியக்காரன் பாக்கியவான். 44அவன் தனக்கு உண்டான எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 45ஆனால் அந்த ஊழியக்காரன்: ‘என் எஜமான் வர நாள்செல்லும்’ என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தொடங்கினால், 46அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத வேளையிலும் அவனுடைய எஜமான் வந்து, அவனை வெட்டி, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். 47தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்திருந்தும் ஆயத்தமாகாமலும் அதன்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். 48அறியாதவனாயிருந்து, தண்டனைக்கேற்றவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனுக்கு அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்கப்படும்; எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கப்பட்டதோ அவனிடத்தில் இன்னும் அதிகமாய்க் கேட்கப்படும்.
குமாரன் அமைதியையல்ல, அக்கினியைக் கொண்டுவருகிறார்
49“நான் பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன்; அது இப்பொழுதே பற்றியெரிந்தால் என் விருப்பம் எவ்வளவு நிறைவேறும்! 50ஆனால் நான் பெற்றுக்கொள்ளவேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு; அது நிறைவேறும்வரைக்கும் நான் எவ்வளவாய் நெருக்கப்படுகிறேன்! 51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை; பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள்; மூன்றுபேர் இரண்டுபேருக்கு விரோதமாகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு விரோதமாகவும் இருப்பார்கள். 53தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும் விரோதமாகவும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும் விரோதமாகவும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாகவும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
54பின்பு அவர் ஜனக்கூட்டங்களை நோக்கி: “நீங்கள் மேற்கே ஒரு மேகம் எழும்புகிறதைக் காணும்போது, மழை வருகிறது என்று உடனே சொல்லுகிறீர்கள்; அப்படியே சம்பவிக்கிறது.
55தென்றல் அடிக்கிறபோது, உஷ்ணம் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள்; அப்படியே சம்பவிக்கிறது. 56மாயக்காரரே! பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே; இந்தக் காலத்தை நீங்கள் நிதானிக்காமலிருக்கிறது ஏன்?
57“நீதியானதை நீங்களே ஏன் தீர்மானிக்கிறதில்லை? 58உன்மேல் வழக்காடுகிறவனோடே நீ அதிகாரியினிடத்திற்குப் போகையில், வழியிலே அவனோடே சமாதானமாகும்படி பிரயத்தனம்பண்ணு; இல்லாவிட்டால் அவன் உன்னை நியாயாதிபதியினிடத்தில் இழுத்துக்கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை உத்தியோகஸ்தனிடத்தில் ஒப்புவிப்பான், உத்தியோகஸ்தன் உன்னைச் சிறையிலே போடுவான். 59நீ கடைசிக் காசைக்கூடச் செலுத்துமளவும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்.