பில்தாத் மறுபடியும் பேசுகிறான்
25 1அப்பொழுது சூகியனாகிய பில்தாத் மறுமொழியாகச் சொன்னதாவது: 2“ஆளுகையும் பயமும் அவருக்கே உரியன; அவர் தமது உன்னதங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 3அவருடைய சேனைகளை எண்ணக்கூடியவன் யார்? அவருடைய ஒளி யார்மேல்தான் உதிக்காது? 4அப்படியானால் மனிதன் தேவனுக்கு முன்பாக எப்படி நீதிமானாயிருப்பான்? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் எப்படிச் சுத்தமாயிருப்பான்? 5இதோ, சந்திரனும் ஒளியற்றது, நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் சுத்தமற்றவை; 6புழுவாகிய மனிதன் எத்தனை அற்பமாயிருப்பான், கிருமியாகிய மனுஷகுமாரனும் எத்தனை அற்பமாயிருப்பான்!”