ரேகாபியர் தங்கள் தகப்பனைக் கனம்பண்ணுதல்
35 1யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் யூதாவின் ராஜாவாயிருந்த நாட்களில், எங்கள் பிதாவிடத்திலிருந்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2“நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களை என் ஆலயத்தின் ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு.”
3அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவின் மகன் யசனியாவையும், அவன் சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பம் அனைத்தையும் அழைத்துக்கொண்டு, 4அவர்களை எங்கள் பிதாவின் ஆலயத்திலே, தேவனுடைய மனுஷனாகிய இக்தலியாவின் குமாரன் ஆனானுடைய குமாரரின் அறைக்குள்ளே அழைத்துக்கொண்டுவந்தேன்; அது பிரபுக்களின் அறைக்கு அடுத்ததும், வாசல் காவலனாகிய சல்லூமின் குமாரன் மாசெயாவின் அறைக்கு மேலிடத்திலும் இருந்தது. 5பின்பு நான் ரேகாபியருடைய வீட்டாரின் குமாரருக்கு முன்பாக, திராட்சரசம் நிறைந்த கிண்ணங்களையும் பாத்திரங்களையும் வைத்து, “திராட்சரசம் குடியுங்கள்” என்றேன்.
6அதற்கு அவர்கள்: “நாங்கள் திராட்சரசம் குடிக்கமாட்டோம்; ஏனெனில் ரேகாபின் குமாரனாகிய யோனதாப் என்னும் எங்கள் தகப்பன் எங்களுக்குக் கட்டளையிட்டு: ‘நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடிக்கவேண்டாம். 7வீடு கட்டவேண்டாம், விதை விதைக்கவேண்டாம், திராட்சத்தோட்டம் நடவேண்டாம், அப்படிப்பட்டதொன்றும் உங்களுக்கு உரிமையாக இருக்கவேண்டாம்; நீங்கள் தங்கியிருக்கும் தேசத்திலே அநேக நாட்கள் பிழைத்திருக்கும்படி, உங்கள் நாட்களெல்லாம் கூடாரங்களில் குடியிருங்கள்’ என்றார். 8அப்படியே ரேகாபின் குமாரனாகிய யோனதாப் என்னும் எங்கள் தகப்பன் எங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் நாங்கள் கீழ்ப்படிந்து, நாங்களும் எங்கள் மனைவிகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் எங்கள் நாட்களெல்லாம் திராட்சரசம் குடிக்காமலும், 9நாங்கள் குடியிருக்கும்படி வீடுகள் கட்டாமலும் இருந்தோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதையும் இல்லை. 10நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து அப்படியே செய்துவந்தோம். 11ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசத்தின்மேல் படையெடுத்துவந்தபோது, நாங்கள்: ‘வாருங்கள், கல்தேயருடைய படைக்கும் சீரியருடைய படைக்கும் தப்பிக்கும்படி எருசலேமுக்குப் போவோம்’ என்று சொல்லி, எருசலேமிலே குடியிருக்கிறோம்” என்றார்கள்.
12அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று:
13பரலோகச் சேனைகளின் பிதாவும் இஸ்ரவேலின் பிதாவுமானவர் சொல்லுகிறது இதுவே: நீ போய், யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டியது: நீங்கள் புத்திமதியை ஏற்றுக்கொண்டு, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கமாட்டீர்களா? என்று எங்கள் பிதா சொல்லுகிறார். 14ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் பிள்ளைகள் திராட்சரசம் குடிக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டன; அவர்கள் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததினால், இந்நாள்வரைக்கும் ஒன்றும் குடிக்கிறதில்லை. நானோ உங்களோடே ஏனேக முறை பேசினேன், ஆனாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை.
15‘நீங்கள் அவனவன் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செய்கைகளைச் சீர்படுத்தி, அந்நிய தேவர்களைப் பின்பற்றி அவர்களை சேவியாமலிருங்கள்; அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள்’ என்று சொல்ல, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர் எல்லாரையும் ஏனேக முறை உங்களிடத்திற்கு அனுப்பினேன்; ஆனாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், எனக்குக் கவனங்கொடாமலும் இருந்தீர்கள். 16ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் சந்ததியார் தங்கள் தகப்பனுடைய கட்டளையைக் கைக்கொண்டார்கள்; இந்த ஜனங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை.
17ஆகையால் பரலோகச் சேனைகளின் பிதாவும் இஸ்ரவேலின் பிதாவுமானவர் சொல்லுகிறது: “இதோ, நான் யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் அனைவரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லா ஆபத்துகளையும் வரப்பண்ணுவேன்; ஏனெனில் நான் அவர்களோடே பேசியும் அவர்கள் செவிகொடுக்கவில்லை, நான் அவர்களைக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை” என்கிறார்.
18பின்பு எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தை நோக்கி: “பரலோகச் சேனைகளின் பிதாவும் இஸ்ரவேலின் பிதாவுமானவர் சொல்லுகிறது: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் செய்தபடியினால், 19பரலோகச் சேனைகளின் பிதாவும் இஸ்ரவேலின் பிதாவுமானவர் சொல்லுகிறது: ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு எனக்கு முன்பாக நிற்கும் சந்ததியான் என்றென்றைக்கும் ஒருபோதும் குறையாதிருப்பான்” என்றார்.