என்னிடத்தில் ஏறிவா
24 1அவர் மோசேயை நோக்கி: “நீயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபது பேரும் கர்த்தராகிய என்னிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்து தொழுதுகொள்ளுங்கள். 2மோசே மாத்திரம் என்னிடத்தில் சேரலாம்; மற்றவர்கள் சேரவேண்டாம், ஜனங்களும் அவனோடேகூட ஏறிவரவேண்டாம்” என்றார்.
3மோசே வந்து, எங்கள் பிதாவின் வார்த்தைகள் யாவற்றையும், நியாயங்கள் யாவற்றையும் ஜனங்களுக்குச் சொன்னான். ஜனங்கள் எல்லாரும் ஒரே சத்தமாய்: “எங்கள் பிதா சொன்னபடியெல்லாம் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.
4மோசே எங்கள் பிதாவின் வார்த்தைகள் யாவற்றையும் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் கட்டினான். 5பின்பு அவன் இஸ்ரவேல் புத்திரரில் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, எங்கள் பிதாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளையும் பலியிட்டார்கள். 6மோசே இரத்தத்தில் பாதியை எடுத்துப் பாத்திரங்களில் வைத்து, மறுபாதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். 7பின்பு அவன் உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, ஜனங்கள் கேட்க வாசித்தான். அவர்கள்: “எங்கள் பிதா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
8அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்கள்மேல் தெளித்து: “இதோ, இந்த வார்த்தைகள் யாவற்றின்படியும் எங்கள் பிதா உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான். a a v8 இந்த இரத்தம் ஜனங்களுக்கும் எங்கள் பிதாவுக்கும் இடையிலான உடன்படிக்கையை முத்திரையிட்டது; இயேசு பாத்திரத்தின்மேல் இந்த வார்த்தைகளையே எடுத்துச் சொன்னார் — “இது உடன்படிக்கைக்குரிய என் இரத்தம்” — நம்மை வீட்டிற்குக் கொண்டுவரும் புது உடன்படிக்கையின் முத்திரையாகத் தமது சொந்த இரத்தத்தையே ஆக்கினார்.
9அப்பொழுது மோசேயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபது பேரும் ஏறிப்போய், 10இஸ்ரவேலின் பிதாவைத் தரிசித்தார்கள்; அவருடைய பாதங்களின்கீழே இந்திரநீலக் கல்லால் இழைத்த தளம்போலவும், வானத்தைப்போலத் தெளிவாயும் இருந்தது. 11அவர் இஸ்ரவேலின் தலைவர்கள்மேல் தமது கையை நீட்டவில்லை; அவர்கள் எங்கள் பிதாவைத் தரிசித்து, புசித்துக் குடித்தார்கள்.
12எங்கள் பிதா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்தில் ஏறிவந்து அங்கே இரு; அவர்களுக்குப் போதிக்கும்படி நான் எழுதின நியாயப்பிரமாணமும் கற்பனையும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
13அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடேகூடப் புறப்பட்டு, எங்கள் பிதாவின் மலையின்மேல் ஏறினான். 14அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடத்திற்குத் திரும்பிவருமட்டும், இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். இதோ, ஆரோனும் ஊரும் உங்களோடே இருக்கிறார்கள்; வழக்குள்ளவன் எவனும் அவர்களிடத்தில் போகக்கடவன்” என்றான்.
15மோசே மலையின்மேல் ஏறினபோது, மேகம் மலையை மூடிக்கொண்டது, 16எங்கள் பிதாவின் மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் அதை ஆறுநாள் மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17எங்கள் பிதாவின் மகிமை இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு மலையின் உச்சியில் பட்சிக்கிற அக்கினியைப்போலக் காணப்பட்டது. 18மோசே மேகத்தின் நடுவில் பிரவேசித்து, மலையின்மேல் ஏறினான்; மோசே மலையின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் இருந்தான்.