மொர்தெகாயின் மகத்துவம்
10 1அகாஸ்வேரு ராஜா தேசத்தின்மேலும் சமுத்திரத்தின் தீவுகளின்மேலும் கப்பம் விதித்தான். 2அவனுடைய வல்லமையும் பராக்கிரமமுமான எல்லாச் செயல்களும், ராஜா மொர்தெகாயை உயர்த்திய மகத்துவத்தின் முழு விவரமும், மேதிய பெர்சியா ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்படவில்லையா? 3யூதனாகிய மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு இரண்டாவதாக இருந்து, யூதரிடத்தில் பெரியவனாயும், தன் அநேக சகோதரரால் விரும்பப்பட்டவனாயும், தன் ஜனத்தின் நன்மையை நாடி, தன் சந்ததியனைத்திற்கும் சமாதானம் பேசுகிறவனாயும் இருந்தான்.