வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

2 இராஜாக்கள் 22

புத்தகம்

யோசியா பிதாவானவருக்கு முன்பாக நீதியைச் செய்கிறான்

அதிகாரம் 22.

யோசியா ராஜாவாகும்போது எட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் எருசலேமிலே முப்பத்தொரு வருஷம் அரசாண்டான். அவன் தாயின் பேர் யெதீதாள்; அவள் போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தி. அவன் எங்கள் பிதாவின் பார்வையில் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளிலெல்லாம் நடந்து, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகவில்லை.

ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மேசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகனான சாப்பான் என்னும் சம்பிரதியை எங்கள் பிதாவின் ஆலயத்திற்கு அனுப்பி, சொன்னது: நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், எங்கள் பிதாவின் ஆலயத்திற்குள் கொண்டுவரப்பட்டதும், வாசல் காக்கிறவர்கள் ஜனங்களிடத்தில் சேர்த்ததுமான பணத்தை அவன் தொகையிட்டு எண்ணச்செய். அதை எங்கள் பிதாவின் ஆலயத்தின் வேலையை விசாரிக்கும்படி நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்காரர் கையிலே கொடுக்கவும்; ஆலயத்தின் பழுதுகளைப் பழுதுபார்க்கிற எங்கள் பிதாவின் ஆலயத்திலுள்ள வேலையாட்களுக்கு அவர்கள் அதைக் கொடுக்கட்டும். அதாவது, தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொத்தனார்களுக்கும் கொடுத்து, ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்கு மரங்களையும் வெட்டப்பட்ட கற்களையும் கொள்ளவும் கொடுக்கட்டும். அவர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்ட பணத்தைக்குறித்து அவர்களிடத்தில் கணக்குக் கேட்கவேண்டியதில்லை; ஏனெனில் அவர்கள் உண்மையாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

நியாயப்பிரமாண புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி, “எங்கள் பிதாவின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன்” என்று சொல்லி, அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு: “உம்முடைய ஊழியக்காரர் ஆலயத்திலே கண்ட பணத்தைக் கொட்டி, அதை எங்கள் பிதாவின் ஆலயத்திலுள்ள வேலையாட்களுக்கும் மேற்பார்வைக்காரர்களுக்கும் கொடுத்தார்கள்” என்று சொன்னான். பின்னும் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு: “இல்க்கியா என்னும் ஆசாரியன் ஒரு புத்தகச்சுருளை என்னிடத்தில் கொடுத்தான்” என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான். பின்பு ராஜா ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: நீங்கள் போய், கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக்குறித்து எனக்காகவும், ஜனத்திற்காகவும், யூதா அனைத்திற்காகவும் எங்கள் பிதாவினிடத்தில் விசாரியுங்கள்; நம்முடைய முன்னோர்கள் நம்மைக்குறித்து எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியும் செய்கிறதற்கு இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், எங்கள் பிதாவுக்கு நமக்கு விரோதமாய் மூண்ட கோபம் பெரிது.

அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனும், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனுமாகிய சல்லூமின் மனைவியான உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமிலே இரண்டாம் பாகத்திலே குடியிருந்தாள்; அவர்கள் அவளோடே பேசினார்கள்.

அவள் அவர்களை நோக்கி: “இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால், உங்களை என்னிடத்தில் அனுப்பின மனுஷனிடத்தில் சொல்லுங்கள்: எங்கள் பிதா சொல்லுகிறது: இதோ, யூதாவின் ராஜா வாசித்த புத்தகத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் தீங்கை வரப்பண்ணுவேன். அவர்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியைகளினாலெல்லாம் எனக்குக் கோபமூட்டினபடியால், என் கோபம் இந்த ஸ்தலத்தின்மேல் மூண்டு அணையாதிருக்கும்.

பிதாவானவரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் சொல்லவேண்டியது: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்,

இந்த ஸ்தலத்திற்கும் இதின் குடிகளுக்கும் விரோதமாய், அவைகள் பாழும் சாபமுமாகும் என்று நான் சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, பிதாவானவருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்து, எனக்கு முன்பாக அழுதபடியால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று பிதாவானவர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களோடே சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையிலே சேர்க்கப்படுவாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் தீங்கையெல்லாம் உன் கண்கள் காணாது” என்றாள். அப்பொழுது அவர்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவு கொண்டுபோனார்கள்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.