அத்தாலியாள் சிங்காசனத்தைக் கைப்பற்றுதல்
11 1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் மரித்துப்போனதைக் கண்டபோது, அவள் எழும்பி ராஜவம்சத்தார் அனைவரையும் அழிக்கத் தொடங்கினாள். 2ஆனாலும் யோராம் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், அகசியாவின் குமாரனாகிய யோவாசை, கொலைசெய்யப்படவிருந்த ராஜாவின் குமாரர் நடுவிலிருந்து திருட்டளவாய் எடுத்துக்கொண்டு, அவனையும் அவனுடைய தாதியையும் படுக்கை அறையில் மறைத்து, அத்தாலியாளுக்குத் தப்புவித்ததால் அவன் கொலைசெய்யப்படவில்லை. 3அத்தாலியாள் தேசத்தை ஆண்டுவந்த ஆறு வருஷம் அவன் அவளோடே எங்கள் பிதாவின் ஆலயத்தில் மறைந்திருந்தான்.
எங்கள் பிதா உரிமையுள்ள ராஜாவைக் காத்தல்
4ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்குத் தலைவராகிய காரியரையும் காவலாளரையும் அழைத்தனுப்பி, அவர்களை எங்கள் பிதாவின் ஆலயத்திலே தன்னிடத்தில் வரவழைத்து, அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, எங்கள் பிதாவின் ஆலயத்தில் அவர்களை ஆணையிடச்செய்து, ராஜாவின் குமாரனை அவர்களுக்குக் காண்பித்தான். 5அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: “நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், ஓய்வுநாளில் பணிக்கு வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் ராஜ அரண்மனையைக் காவல்காக்கக்கடவர்கள், 6மூன்றில் ஒரு பங்கினர் சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கினர் காவலாளருக்குப் பின்னாலிருக்கிற வாசலிலும் இருந்து, முறைவைத்து அரண்மனையைக் காவல்காக்கக்கடவர்கள். 7ஓய்வுநாளில் பணிநீங்குகிற உங்கள் மற்ற இரண்டு பிரிவினர் ராஜாவுக்காக எங்கள் பிதாவின் ஆலயத்தைக் காவல்காக்கக்கடவர்கள். 8நீங்கள் ஒவ்வொருவனும் தன் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டு ராஜாவைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுங்கள்; அணிவகுப்பினுள் நெருங்கிவருகிற எவனையும் கொன்றுபோடுங்கள்; ராஜா போகிற இடமெங்கும் அவனோடேகூடவே இருங்கள்.”
9ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்குத் தலைவர் செய்தார்கள். அவர்களில் ஒவ்வொருவனும் ஓய்வுநாளில் பணிக்கு வருகிறவர்களையும் பணிநீங்குகிறவர்களையும் தன்னோடே சேர்த்துக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தான். 10ஆசாரியன் எங்கள் பிதாவின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தாவீது ராஜாவின் ஈட்டிகளையும் கேடயங்களையும் நூறுபேருக்குத் தலைவர்களிடத்தில் கொடுத்தான். 11காவலாளர் ஒவ்வொருவனும் தன் ஆயுதத்தைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆலயத்தின் தென்பக்கம் தொடங்கி வடபக்கம்வரையும், பலிபீடத்தண்டையிலும் ஆலயத்தண்டையிலும் ராஜாவைச் சுற்றி நின்றார்கள். 12யோய்தா ராஜாவின் குமாரனை வெளியே கொண்டுவந்து, அவனுக்கு கிரீடம் தரித்து, சாட்சியின் புத்தகத்தையும் கொடுத்தான்; அவர்கள் அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி, கைகொட்டி, “ராஜா வாழ்க!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
13காவலாளரும் ஜனங்களும் ஆரவாரிக்கிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் எங்கள் பிதாவின் ஆலயத்தில் ஜனங்களிடத்தில் வந்தாள். 14அவள் பார்க்கும்போது, இதோ, வழக்கத்தின்படியே ராஜா தூணின் அருகே நின்றுகொண்டிருந்தான்; தலைவரும் எக்காளம் ஊதுகிறவர்களும் ராஜாவின் அருகே நின்றார்கள்; தேசத்தின் ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, “துரோகம்! துரோகம்!” என்று கூக்குரலிட்டாள்.
15ஆசாரியனாகிய யோய்தா, சேனையின்மேல் நியமிக்கப்பட்ட நூறுபேருக்குத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: “அவளை அணிவகுப்புகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; அவளைப் பின்தொடர்ந்துவருகிற எவனையும் பட்டயத்தால் கொல்லுங்கள்” என்றான்; ஏனெனில் அவள் எங்கள் பிதாவின் ஆலயத்தில் கொல்லப்படலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 16அப்படியே அவர்கள் அவளைப் பிடித்தார்கள்; அவள் குதிரைகள் நுழையும் வழியாய் அரண்மனைக்குப் போனபோது, அங்கே அவள் கொலைசெய்யப்பட்டாள்.
17பின்பு யோய்தா, ஜனங்கள் எங்கள் பிதாவின் ஜனமாயிருப்பார்கள் என்று, எங்கள் பிதாவுக்கும் ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் நடுவே ஒரு உடன்படிக்கையையும், ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் நடுவே ஒரு உடன்படிக்கையையும் பண்ணினான். 18தேசத்தின் ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்துப்போட்டு, அதின் பலிபீடங்களையும் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் ஆசாரியனாகிய மாத்தானை பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். பின்பு ஆசாரியன் எங்கள் பிதாவின் ஆலயத்தின்மேல் காவலாளரை நியமித்தான். 19அவன் நூறுபேருக்குத் தலைவர்களையும், காரியரையும், காவலாளரையும், தேசத்தின் ஜனங்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு, ராஜாவை எங்கள் பிதாவின் ஆலயத்திலிருந்து காவலாளரின் வாசல்வழியாய் ராஜ அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அங்கே அவன் ராஜாக்களின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். 20அத்தாலியாள் ராஜாவின் அரண்மனையண்டையிலே பட்டயத்தால் கொல்லப்பட்டபின்பு, தேசத்தின் ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டார்கள், நகரமும் அமைதலாயிருந்தது.
21யோவாஸ் ராஜாவானபோது ஏழு வயதுள்ளவனாயிருந்தான்.