சாலொமோன் தன் ராஜ்யத்தைக் கட்டி ஒழுங்குபடுத்துதல்
8 1சாலொமோன் எங்கள் பிதாவின் ஆலயத்தையும் தன் அரண்மனையையும் கட்டி முடிக்க இருபது வருடங்கள் சென்றபின், 2ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் திரும்பக் கட்டி, இஸ்ரவேல் மக்களை அவைகளில் குடியேற்றினான்.
3பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்கு விரோதமாகப் போய், அதை மேற்கொண்டான். 4அவன் வனாந்தரத்தில் தாத்மோரையும், ஆமாத்திலே தான் கட்டின எல்லாக் களஞ்சியப் பட்டணங்களையும் கட்டினான். 5மேற்புற பெத்யொரோனையும் கீழ்ப்புற பெத்யொரோனையும் மதில்களும் வாசல்களும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணிப்பான பட்டணங்களாகத் திரும்பக் கட்டினான்; 6பாலாத்தையும், சாலொமோனுக்கு உண்டாயிருந்த எல்லாக் களஞ்சியப் பட்டணங்களையும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் உரிய பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தன் ராஜ்யத்தின் எல்லாப் பகுதியிலும் கட்ட விரும்பின எல்லாவற்றையும் கட்டினான்.
7இஸ்ரவேலராயிராத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களில் மீதியாக இருந்த மக்கள் இன்னும் இருந்தார்கள். 8இஸ்ரவேலர் அழிக்காமல் தேசத்தில் இன்னும் மீதியாய் வாழ்ந்திருந்த அவர்களுடைய சந்ததியாரை, சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, கட்டாய வேலைக்குப் பிடித்தான். 9சாலொமோன் தன் வேலைக்காக இஸ்ரவேலரில் ஒருவரையும் அடிமையாக்கவில்லை; அவர்கள் அவனுடைய போர்வீரர்களும், அவனுடைய தலைவர்களின் அதிபதிகளும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் அதிபதிகளுமாய் இருந்தார்கள். 10மக்களை மேற்பார்வையிட்ட ராஜாவாகிய சாலொமோனுடைய பிரதான அதிகாரிகள் இவர்களே: இருநூற்று ஐம்பதுபேர்.
11சாலொமோன் பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து அவளுக்காகத் தான் கட்டின அரண்மனைக்கு அழைத்துவந்து: “எங்கள் பிதாவின் பெட்டி பிரவேசித்த இடமெல்லாம் பரிசுத்தமாயிருக்கிறபடியால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழலாகாது” என்றான்.
12அப்பொழுது சாலொமோன், மண்டபத்திற்கு முன்பாகத் தான் கட்டின பலிபீடத்தின்மேல் எங்கள் பிதாவுக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்; 13மோசேயின் கட்டளையின்படி, ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், வருடத்திற்கு மூன்றுமுறை வரும் பண்டிகைகளாகிய புளிப்பில்லா அப்பப் பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப் பண்டிகையிலும், அன்றன்றைக்கு வேண்டியபடி செலுத்தினான்.
14அவன் தன் தகப்பனாகிய தாவீதின் முறைமைகளின்படி, ஆசாரியர்களின் வகுப்புகளை அவர்கள் ஊழியத்திற்கும், லேவியரின் வகுப்புகளை அன்றன்றைக்கு வேண்டியபடி ஆசாரியர்களுக்கு முன்பாகத் துதிசெய்யவும் ஊழியம்செய்யவும், வாசல் காவலாளரின் வகுப்புகளை ஒவ்வொரு வாசலிலும் நியமித்தான்; ஏனெனில் எங்கள் பிதாவின் மனிதனாகிய தாவீது அப்படியே கட்டளையிட்டிருந்தான். 15களஞ்சியசாலைகள் விஷயமாகிலும் மற்றெதுவினாலும், ராஜா ஆசாரியர்களுக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை அவர்கள் ஒன்றுவிடாமல் கைக்கொண்டார்கள்.
16எங்கள் பிதாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள் முதல் அது முடியும்வரைக்கும், சாலொமோனுடைய வேலையெல்லாம் நிறைவேறியது; இப்படி எங்கள் பிதாவின் ஆலயம் பூரணமாய் முடிந்தது.
17அப்பொழுது சாலொமோன் ஏதோம் தேசத்தில் கடற்கரையில் இருந்த எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான். 18ஈராம் தன் ஊழியக்காரர்கள் மூலமாய் அவனுக்குக் கப்பல்களையும், கடலை அறிந்த மாலுமிகளையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனுடைய ஊழியக்காரர்களோடேகூட ஓப்பீருக்குப் போய், அங்கேயிருந்து ஏறக்குறைய பதினேழு டன் பொன்னை எடுத்து, ராஜாவாகிய சாலொமோனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.