சீஷாக் எருசலேமைத் தாக்குதல்
12 1ரெகொபெயாமின் ராஜ்யம் உறுதிப்பட்டு பலங்கொண்டபோது, அவனும் அவனோடிருந்த இஸ்ரவேலர் அனைவரும் எங்கள் பிதாவின் நியாயப்பிரமாணத்தைக் கைவிட்டார்கள். 2அவர்கள் எங்கள் பிதாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தபடியால், ரெகொபெயாமின் ஐந்தாம் வருடத்திலே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான். 3அவன் 1,200 இரதங்களோடும், 60,000 குதிரைவீரர்களோடும், எகிப்திலிருந்து வந்த எண்ணிறந்த படையினரோடும் வந்தான்: லிபியர், சுக்கியர், கூஷியர் என்பவர்களோடும். 4அவன் யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரைக்கும் வந்தான்.
5சீஷாக் நிமித்தம் எருசலேமில் கூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும் யூதாவின் பிரபுக்களிடத்திற்கும் தீர்க்கதரிசியாகிய செமயா வந்து சொன்னது: “எங்கள் பிதா சொல்லுகிறது இதுதான்: நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள், ஆதலால் நானும் உங்களை சீஷாக்கின் கையில் கைவிடுகிறேன்.”
6அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி, “எங்கள் பிதா நீதியுள்ளவர்” என்றார்கள்.
7அவர்கள் தங்களைத் தாழ்த்தினதை எங்கள் பிதா கண்டபோது, எங்கள் பிதாவின் வார்த்தை செமயாவுக்கு உண்டாயிற்று: “அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள்; நான் அவர்களை அழிப்பதில்லை, ஆனாலும் அவர்களுக்குச் சிறிது இரட்சிப்பை அருளுவேன்; என் கோபம் சீஷாக்கின் கையால் எருசலேமின்மேல் ஊற்றப்படுவதில்லை. 8ஆனாலும் அவர்கள் சீஷாக்கிற்கு ஊழியக்காரராயிருப்பார்கள்; அப்பொழுது என் ஊழியத்தையும், பூமிக்குரிய ராஜ்யங்களின் ஊழியத்தையும் அறிந்துகொள்வார்கள்.”
9அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, எங்கள் பிதாவின் ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜ அரண்மனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்த பொன் கேடயங்களையும் உள்பட, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான். 10ரெகொபெயாம் ராஜா அவைகளுக்குப் பதிலாக வெண்கலக் கேடயங்களைச் செய்து, ராஜாவின் அரண்மனையின் வாசலைக் காவல்காத்த காவலாளர்களின் தலைவர்கள் கையில் ஒப்புவித்தான். 11ராஜா எங்கள் பிதாவின் ஆலயத்தில் பிரவேசிக்கும்போதெல்லாம், காவலாளர்கள் அந்தக் கேடயங்களை எடுத்துக்கொண்டுபோய், பின்பு அவைகளை மறுபடியும் காவற்கூடத்திற்குக் கொண்டுவந்து வைப்பார்கள். 12ரெகொபெயாம் தன்னைத் தாழ்த்தினதால், எங்கள் பிதாவின் கோபம் அவனை முற்றிலும் அழிக்காதபடி அவனைவிட்டு விலகிற்று; யூதாவிலும் நல்ல காரியங்கள் இருந்தன.
13ரெகொபெயாம் ராஜா எருசலேமில் தன்னைப் பலப்படுத்தி அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதுள்ளவனாயிருந்து, எங்கள் பிதா தமது நாமத்தை ஸ்தாபிக்கும்படி இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமாகிய எருசலேமில் பதினேழு வருடம் அரசாண்டான். அவன் தாயின் பேர் நாமாள்; அவள் அம்மோனியாள். 14எங்கள் பிதாவைத் தேடுவதற்குத் தன் இருதயத்தை அவன் நேராக்காதபடியால், அவன் பொல்லாப்பானதைச் செய்தான்.
15ரெகொபெயாமின் செய்கைகள், முந்தினவைகளும் பிந்தினவைகளும், தீர்க்கதரிசியாகிய செமயாவினுடையவும் தரிசனக்காரனாகிய இத்தோவினுடையவும் பதிவுகளில் வம்சவரலாறுகளோடு எழுதப்பட்டிருக்கிறது அல்லவோ? ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் எப்பொழுதும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 16ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் அரசாண்டான்.