தாவீது கேகிலாவை மீட்கும்படி பிதாவானவர் வழிநடத்துகிறார்
23 1அவர்கள் தாவீதுக்கு அறிவித்து, “இதோ, பெலிஸ்தர் கேகிலாவுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, களங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றார்கள்.
2அப்பொழுது தாவீது எங்கள் பிதாவை நோக்கி, “நான் போய் இந்தப் பெலிஸ்தரைத் தாக்கலாமா?” என்று விசாரித்தான். அதற்கு எங்கள் பிதா, “நீ போய், பெலிஸ்தரைத் தாக்கி, கேகிலாவை மீட்டுக்கொள்” என்று பதிலளித்தார்.
3தாவீதின் மனுஷர் அவனை நோக்கி, “இதோ, இங்கே யூதாவிலேயே நாங்கள் பயந்திருக்கிறோம்; அப்படியிருக்க, பெலிஸ்தருடைய படைவகுப்புகளுக்கு விரோதமாய்க் கேகிலாவுக்குப் போனால் எத்தனை அதிகமாய்!” என்றார்கள்.
4தாவீது மறுபடியும் எங்கள் பிதாவை விசாரித்தான்; எங்கள் பிதா அவனுக்குப் பதிலாக, “எழுந்து, கேகிலாவுக்கு இறங்கிப்போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்” என்றார்.
5அப்பொழுது தாவீதும் அவன் மனுஷரும் கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களுடைய மிருகஜீவன்களை ஓட்டிக்கொண்டுவந்து, அவர்களை மகா சங்காரமாய் முறியடித்து, கேகிலாவின் குடிகளை மீட்டார்கள்.
6அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவிலிருந்த தாவீதினிடத்திற்கு ஓடிவந்தபோது, ஏபோத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு வந்தான்.
7தாவீது கேகிலாவில் இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, சவுல், “தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்தில் பிரவேசித்ததினால், தன்னைத்தானே அடைத்துக்கொண்டான்” என்றான். 8பின்பு சவுல், கேகிலாவுக்கு இறங்கிப்போய், தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கைபோடும்படி, ஜனங்களெல்லாரையும் யுத்தத்திற்கு வரவழைத்தான். 9சவுல் தனக்கு விரோதமாய்ப் பொல்லாப்பு யோசிக்கிறான் என்று தாவீது அறிந்து, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி, “ஏபோத்தை இங்கே கொண்டுவா” என்றான். 10பின்பு தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய என் பிதாவே, சவுல் என்னிமித்தம் கேகிலாவுக்கு வந்து, பட்டணத்தை அழிக்க யோசிக்கிறான் என்பதை உமது அடியேன் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
11கேகிலாவின் குடிகள் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களா? உமது அடியேன் கேள்விப்பட்டபடியே சவுல் இறங்கிவருவானா? இஸ்ரவேலின் தேவனாகிய என் பிதாவே, உமது அடியேனுக்குத் தயவுசெய்து அறிவியும்” என்றான். அதற்கு எங்கள் பிதா, “அவன் இறங்கிவருவான்” என்றார்.
12அப்பொழுது தாவீது, “கேகிலாவின் குடிகள் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களா?” என்று கேட்டான். அதற்கு எங்கள் பிதா, “ஒப்புக்கொடுப்பார்கள்” என்றார்.
13அப்பொழுது தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழுந்து, கேகிலாவைவிட்டுப் புறப்பட்டு, தாங்கள் போகக்கூடிய இடங்களுக்கெல்லாம் அலைந்து திரிந்தார்கள். தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அவனைப் பின்தொடர்வதை நிறுத்தினான். 14தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான இடங்களிலும், சீப் வனாந்தரத்தின் மலைத்தேசத்திலும் தங்கியிருந்தான். சவுல் நாள்தோறும் அவனைத் தேடினான்; ஆனாலும் எங்கள் பிதா அவனை இவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15தாவீது தன் பிராணனை வாங்கத் தேடி சவுல் புறப்பட்டுவந்ததைக் கண்டபோது, அவன் சீப் வனாந்தரத்திலுள்ள கோரேசில் இருந்தான். 16சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, கோரேசில் இருந்த தாவீதினிடத்திற்குப் போய், அவனை எங்கள் பிதாவில் திடப்படுத்தி, 17அவனை நோக்கி, “பயப்படாதே; என் தகப்பனாகிய சவுலின் கை உன்னைக் கண்டுபிடிக்காது; நீ இஸ்ரவேலின்மேல் ராஜாவாவாய், நான் உனக்கு இரண்டாவதாய் இருப்பேன்; இதை என் தகப்பனாகிய சவுலும் அறிவான்” என்றான். 18அவர்கள் இருவரும் எங்கள் பிதாவுக்கு முன்பாக உடன்படிக்கைபண்ணினார்கள். தாவீது கோரேசில் தங்கினான்; யோனத்தான் தன் வீட்டுக்குப் போனான்.
19அப்பொழுது சீப்பியர் கிபியாவிலிருந்த சவுலினிடத்திற்குப் போய், “எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள அகிலா மேட்டிலிருக்கிற கோரேசின் அரணான இடங்களில் தாவீது எங்களிடத்தில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா? 20இப்பொழுதும் ராஜாவே, உமது மனவிருப்பத்தின்படி நீர் இறங்கிவாரும், இறங்கியே வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பது எங்கள் கடமையாயிருக்கும்” என்றார்கள்.
21அப்பொழுது சவுல், “நீங்கள் என்மேல் இரக்கம் வைத்தபடியால், எங்கள் பிதா உங்களை ஆசீர்வதிப்பாராக. 22நீங்கள் போய், இன்னும் ஆயத்தப்படுங்கள்; அவன் காலடி வைக்கும் இடத்தையும், அங்கே அவனைக் கண்டவர் யார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்; அவன் மகா தந்திரமுள்ளவன் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. 23அவன் ஒளிந்துகொள்ளுகிற எல்லா மறைவிடங்களையும் அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடேகூட வருவேன்; அவன் தேசத்தில் இருந்தால், யூதாவின் சகல வம்சங்களுக்குள்ளும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
24அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னே சீப்புக்குப் போனார்கள். தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கே அரபாவிலுள்ள மாவோன் வனாந்தரத்தில் இருந்தார்கள். 25சவுலும் அவன் மனுஷரும் அவனைத் தேடப் புறப்பட்டார்கள்; அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாவோன் வனாந்தரத்தில் தங்கினான். சவுல் அதைக் கேள்விப்பட்டு, மாவோன் வனாந்தரத்தில் தாவீதைப் பின்தொடர்ந்து போனான். 26சவுல் மலையின் ஒரு பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் மறுபக்கத்திலும் நடந்தார்கள்; தாவீது சவுலைவிட்டுத் தப்பிப்போகத் தீவிரமாய் நடந்தான்; சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கும்படி அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள். 27அப்பொழுது ஒரு தூதன் சவுலினிடத்தில் வந்து, “நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்” என்றான். 28அப்பொழுது சவுல் தாவீதைப் பின்தொடர்வதை நிறுத்தி, பெலிஸ்தருக்கு எதிராகப் போனான்; ஆகையால் அந்த இடத்திற்கு சேலா-அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள். a a v28 சேலா-அம்மாலிகோத் என்றால் “பிரிந்துபோகுதலின் கன்மலை” என்று அர்த்தம் — பெலிஸ்தருடைய படையெடுப்பு சவுலைத் துரத்துதலை நிறுத்திவிடச் செய்தபோது, சவுலும் தாவீதும் ஒருவரையொருவர்விட்டுப் பிரிந்துபோன இடம். 29தாவீது அவ்விடத்தைவிட்டுப் போய், என்கேதியிலுள்ள அரணான இடங்களில் தங்கியிருந்தான்.