எங்கள் பிதாவுக்குப் பயந்திருக்கும்படி சாமுவேல் இஸ்ரவேலை அழைக்கிறார்
12 1சாமுவேல் இஸ்ரவேல் அனைவரையும் நோக்கி: “நீங்கள் எனக்குச் சொன்ன எல்லாவற்றிலும் உங்கள் சத்தத்திற்குச் செவிகொடுத்து, உங்கள்மேல் ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2இப்போது ராஜா உங்களுக்கு முன்பாக நடக்கிறார். நான் முதிர்ந்தவனும் நரைத்தவனுமாய் இருக்கிறேன்; என் குமாரர் உங்களோடு இருக்கிறார்கள். நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக நடந்துவந்தேன். 3இதோ, நான் இருக்கிறேன்; எங்கள் பிதாவுக்கு முன்பாகவும் அவருடைய அபிஷேகம் பெற்றவனுக்கு முன்பாகவும் எனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாரை ஏமாற்றினேன்? யாரை ஒடுக்கினேன்? கண்சாடையாய்ப் பார்க்க யாரிடத்தில் லஞ்சம் வாங்கினேன்? சொல்லுங்கள், நான் உங்களுக்குத் திரும்பச் செலுத்துவேன்.”
4அதற்கு அவர்கள்: “நீர் எங்களை ஏமாற்றவும் இல்லை, ஒடுக்கவும் இல்லை, ஒருவர் கையிலும் ஒன்றையும் எடுத்துக்கொள்ளவும் இல்லை” என்றார்கள்.
5அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என் கையில் ஒன்றையும் காணவில்லை என்பதற்கு எங்கள் பிதா உங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி; அவருடைய அபிஷேகம் பெற்றவரும் இன்று சாட்சி” என்றார். அதற்கு அவர்கள்: “அவரே சாட்சி” என்றார்கள்.
6அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: “மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தி, உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தவர் எங்கள் பிதாவே. 7இப்போதும் நில்லுங்கள்; எங்கள் பிதா உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் செய்த சகல நீதியான செயல்களைக்குறித்து, எங்கள் பிதாவுக்கு முன்பாக நான் உங்களோடு வழக்காடுவேன்.”
8யாக்கோபு எகிப்திற்குள் பிரவேசித்தபோது, உங்கள் முன்னோர்கள் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, இவ்விடத்தில் குடியேற்றினார். 9ஆனாலும் அவர்கள் எங்கள் பிதாவை மறந்துபோனார்கள்; ஆகையால் அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபின் ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் இவர்களோடு யுத்தம்பண்ணினார்கள்.
10அப்பொழுது அவர்கள் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டு: “நாங்கள் பாவஞ்செய்தோம்; எங்கள் பிதாவைவிட்டு பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்தோம்; இப்போது எங்கள் சத்துருக்களின் கையிலிருந்து எங்களை விடுவியும், உம்மைச் சேவிப்போம்” என்றார்கள். 11ஆகையால் எங்கள் பிதா யெருபாகாலையும், பாராக்கையும், யெப்தாவையும், சாமுவேலையும் அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் சத்துருக்களின் கையிலிருந்து உங்களை விடுவித்தார்; நீங்கள் சுகமாய் வாழ்ந்தீர்கள். a a v11 யெருபாகால் என்பது கிதியோனின் மறுபெயர்; இவர் தன் தகப்பனுடைய பாகாலின் பலிபீடத்தை இடித்துப்போட்ட நியாயாதிபதி.
12அம்மோனியரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, எங்கள் பிதா உங்கள் ராஜாவாய் இருந்தும், “அப்படியல்ல, ஒரு ராஜா எங்களை ஆளவேண்டும்” என்று என்னிடத்தில் சொன்னீர்கள். 13இப்போது நீங்கள் தெரிந்துகொண்டு கேட்ட ராஜா இதோ; பாருங்கள், எங்கள் பிதா உங்கள்மேல் ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14நீங்கள் எங்கள் பிதாவுக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல், நீங்களும் உங்களை ஆளும் ராஜாவும் எங்கள் பிதாவைப் பின்பற்றினால், எல்லாம் நன்மையாய் இருக்கும். 15ஆனாலும் நீங்கள் எங்கள் பிதாவுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினால், எங்கள் பிதாவின் கை உங்கள் முன்னோர்களுக்கு விரோதமாய் இருந்ததுபோல, உங்களுக்கும் விரோதமாய் இருக்கும்.
16இப்போதும் நீங்கள் நின்று, எங்கள் பிதா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யப்போகிற இந்தப் பெரிய காரியத்தைப் பாருங்கள். 17இன்று கோதுமை அறுப்புக்காலம் அல்லவா? நான் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் இடிமுழக்கத்தையும் மழையையும் அனுப்புவார்; அப்பொழுது நீங்கள் உங்களுக்காக ஒரு ராஜாவைக் கேட்டதினால் செய்த பொல்லாப்பு எங்கள் பிதாவின் பார்வையில் எவ்வளவு பெரிதென்று அறிந்துகொள்வீர்கள். b b v17 கோடைகாலத்தின் ஆரம்பத்தில் நிகழும் கோதுமை அறுப்புக்காலத்தில் மழை பெய்வதே இல்லை; ஆகையால் திடீரென்று உண்டான இந்த இடிமழை எங்கள் பிதாவிடமிருந்து வந்த அடையாளம் என்பதில் சந்தேகமே இல்லை.
18சாமுவேல் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டான்; அந்நாளிலே எங்கள் பிதா இடிமுழக்கத்தையும் மழையையும் அனுப்பினார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் எங்கள் பிதாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.
19ஜனங்கள் எல்லாரும் சாமுவேலை நோக்கி: “நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய ஊழியக்காரராகிய எங்களுக்காக உம்முடைய பிதாவை நோக்கி விண்ணப்பம்பண்ணும்; நாங்கள் ஒரு ராஜாவைக் கேட்டதினால் எங்கள் பாவங்கள் எல்லாவற்றோடும் இந்தப் பொல்லாப்பையும் சேர்த்துக்கொண்டோம்” என்றார்கள்.
20அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் எங்கள் பிதாவைப் பின்பற்றுவதைவிட்டு விலகாமல், உங்கள் முழு இருதயத்தோடும் அவரைச் சேவியுங்கள். 21ஒன்றுக்கும் உதவாத, விடுவிக்கமாட்டாத, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி விலகிப்போகாதேயுங்கள்; அவைகள் வீணானவைகளே. 22எங்கள் பிதா தம்முடைய மகத்தான நாமத்தினிமித்தம் தம்முடைய ஜனத்தைக் கைவிடமாட்டார்; அவர் உங்களைத் தமக்குச் சொந்த ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமாயிருந்தார். 23நானும் உங்களுக்காக விண்ணப்பம்பண்ணுவதை நிறுத்திவிட்டு, எங்கள் பிதாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வது என்னைவிட்டு விலகுவதாக; நான் உங்களுக்கு நல்லதும் செம்மையுமான வழியைப் போதிப்பேன். 24எங்கள் பிதாவுக்கு மாத்திரம் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் அவரை உண்மையாய்ச் சேவியுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த மகத்தான காரியங்களைச் சிந்தித்துப்பாருங்கள். 25ஆனாலும் நீங்கள் பொல்லாப்பைச் செய்துகொண்டே இருந்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள்.”