பிதாவானவர் காகங்களால் எலியாவைப் போஷிக்கிறார்
17 1கீலேயாத்திலுள்ள திஸ்பே ஊரானாகிய திஸ்பியனான எலியா ஆகாபை நோக்கி, “நான் யாருக்கு முன்பாக நிற்கிறேனோ, அந்த இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா ஜீவனுள்ளவராணை, என் வார்த்தையின்படியேயன்றி இந்த வருஷங்களில் பனியும் மழையும் பெய்யாது” என்றான்.
2அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை எலியாவுக்கு உண்டாகி:
3“நீ இவ்விடத்தைவிட்டு, கிழக்கே திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் உன்னை மறைத்துக்கொள். 4அந்த ஆற்றிலே தண்ணீர் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்கும்படி காகங்களுக்குக் கட்டளையிட்டேன்” என்றார்.
5அவன் போய், எங்கள் பிதா சொன்னபடியே செய்தான்; அவன் போய், யோர்தானுக்குக் கிழக்கேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் தங்கினான். 6காலையிலே காகங்கள் அவனுக்கு அப்பமும் இறைச்சியும், மாலையிலே அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தன; அவன் அந்த ஆற்றிலே தண்ணீர் குடித்தான். 7சிலநாள் சென்றபின்பு, தேசத்தில் மழை பெய்யாதிருந்ததினால் அந்த ஆறு வற்றிப்போயிற்று.
பிதாவானவர் ஒரு விதவையின் மூலமாய் வழங்குகிறார்
8அப்பொழுது எங்கள் பிதாவின் வார்த்தை அவனுக்கு உண்டாகி:
9“நீ எழுந்து, சீதோனை அடுத்த சாறிபாத்துக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் போஷிக்கும்படி அங்கே ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்” என்றார்.
10அவன் எழுந்து சாறிபாத்துக்குப் போனான். பட்டணத்தின் வாசலுக்கு வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைக் கூப்பிட்டு, “நான் குடிக்க ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்றான். 11அவள் அதை எடுக்கப் போகையில், அவன் அவளைக் கூப்பிட்டு, “எனக்கு ஒரு துண்டு அப்பமும் கொண்டுவா” என்றான்.
12அதற்கு அவள், “உன் தேவனாகிய கர்த்தர் ஜீவனுள்ளவராணை, என்னிடத்தில் அப்பம் இல்லை; பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே இருக்கிறது; இதோ, நான் உள்ளே போய், எனக்கும் என் மகனுக்கும் அதைச் சமைத்து, அதைச் சாப்பிட்டு, பின்பு சாகும்படி கொஞ்சம் விறகு பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.
13எலியா அவளை நோக்கி, “பயப்படாதே; நீ போய், சொன்னபடியே செய்; ஆனாலும் முதலாவது அதிலே எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டு என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் மகனுக்கும் செய்.
14ஏனெனில், இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: ‘எங்கள் பிதா பூமியின்மேல் மழை பெய்யப்பண்ணும் நாள்வரைக்கும், பானையின் மாவு செலவழியாமலும், கலயத்தின் எண்ணெய் குறையாமலும் இருக்கும்’ என்கிறார்” என்றான்.
15அவள் போய், எலியா சொன்னபடியே செய்தாள்; அவளும், அவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். 16எலியாவைக்கொண்டு எங்கள் பிதா சொன்னபடியே, பானையின் மாவு செலவழியவும் இல்லை, கலயத்தின் எண்ணெய் குறையவும் இல்லை.
17இந்தக் காரியங்களுக்குப் பின்பு, வீட்டுக்கு உரியவளாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதிப்பட்டான்; அவன் வியாதி மிகவும் கொடிதாகி, அவனில் சுவாசம் இல்லாமல் போயிற்று. 18அவள் எலியாவை நோக்கி, “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் பாவத்தை என் ஞாபகத்திற்கு வரப்பண்ணவும், என் மகனைக் கொல்லவும் என்னிடத்தில் வந்தீரோ?” என்றாள்.
19அதற்கு அவன், “உன் மகனை என்னிடத்தில் தா” என்று சொல்லி, அவளுடைய மடியிலிருந்து அவனை எடுத்து, தான் தங்கியிருந்த மேல்வீட்டறைக்குக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் அவனைக் கிடத்தினான். 20அவன் எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டு, “என் பிதாவே, நான் தங்கியிருக்கிற இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணி, அவள்மேலும் ஆபத்தை வரப்பண்ணினீரோ?” என்றான். 21அவன் அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, எங்கள் பிதாவை நோக்கிக் கூப்பிட்டு, “என் பிதாவே, இந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்ப வரப்பண்ணும்” என்றான்.
22எங்கள் பிதா எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான். a a v22 வேதத்தில் ஒருவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுகிற முதலாம் தடவை இதுவே — இது எங்கள் பிதாவை ஜீவனைக் கொடுக்கிறவராகவும் திரும்பக் கொடுக்கிறவராகவும் வெளிப்படுத்தி, இயேசுவின் மூலமாய் நிறைவாய் வரும் உயிர்த்தெழுதலை முன்னறிவிக்கிறது. 23எலியா அந்தப் பிள்ளையை எடுத்து, மேல்வீட்டறையிலிருந்து வீட்டுக்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்து, “இதோ, உன் மகன் உயிரோடிருக்கிறான்” என்றான்.
24அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி, “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருக்கிற தேவனுடைய வார்த்தை சத்தியம் என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றாள்.