தாவீதின் குமாரர்: பிதாவின் ராஜரீக குடும்பம்
3 1எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: மூத்தவன் அம்னோன், இவன் யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமுக்குப் பிறந்தவன்; இரண்டாம்வன் தானியேல், இவன் கர்மேல் ஊராளாகிய அபிகாயிலுக்குப் பிறந்தவன்; 2மூன்றாம்வன் அப்சலோம், இவன் கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாகாளுக்குப் பிறந்தவன்; நான்காம்வன் அதோனியா, இவன் ஆகீத்தின் குமாரன்; 3ஐந்தாம்வன் செப்பத்தியா, இவன் அபித்தாலுக்குப் பிறந்தவன்; ஆறாம்வன் இத்திரெயாம், இவன் அவனுடைய மனைவியாகிய எக்லாளுக்குப் பிறந்தவன். 4இந்த ஆறுபேரும் எப்ரோனிலே அவனுக்குப் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான். 5எருசலேமிலே அவனுக்குப் பிறந்தவர்கள்: சிமெயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்; இவர்கள் அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சூவாளுக்குப் பிறந்தவர்கள்; 6மேலும் இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், 7நோகா, நேப்பேக், யப்பியா, 8எலிசாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேரும் பிறந்தார்கள். 9இவர்கள் எல்லாரும் தாவீதின் குமாரர்; இவர்களைத் தவிர அவனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரும் இருந்தார்கள்; தாமார் இவர்களுடைய சகோதரி.
10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவன் குமாரன் அபியா, இவன் குமாரன் ஆசா, இவன் குமாரன் யோசபாத், 11இவன் குமாரன் யோராம், இவன் குமாரன் அகசியா, இவன் குமாரன் யோவாஸ், 12இவன் குமாரன் அமத்சியா, இவன் குமாரன் அசரியா, இவன் குமாரன் யோதாம், 13இவன் குமாரன் ஆகாஸ், இவன் குமாரன் எசேக்கியா, இவன் குமாரன் மனாசே, 14இவன் குமாரன் ஆமோன், இவன் குமாரன் யோசியா. 15யோசியாவின் குமாரர்: மூத்தவன் யோகனான்; இரண்டாம்வன் யோயாக்கீம்; மூன்றாம்வன் சிதேக்கியா; நான்காம்வன் சல்லூம். 16யோயாக்கீமின் குமாரர்: இவன் குமாரன் எகொனியா, இவன் குமாரன் சிதேக்கியா.
17சிறைப்பட்டுப்போன எகொனியாவின் குமாரர்: இவன் குமாரன் சலாத்தியேல், 18மல்கீராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஓசாமா, நெதபியா என்பவர்கள். 19பெதாயாவின் குமாரர்: செருபாபேல், சீமேயி என்பவர்கள். செருபாபேலின் குமாரர்: மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; செலோமித் இவர்களுடைய சகோதரி; 20மேலும் அசுபா, ஓகேல், பெரகியா, அசதியா, யுசாப்எசேத் என்னும் ஐந்துபேர். 21அனனியாவின் குமாரர்: பெலத்தியா, எஷாயா என்பவர்கள்; ரெப்பாயாவின் குமாரர், அர்னானின் குமாரர், ஒபதியாவின் குமாரர், செக்கனியாவின் குமாரர் என்பவர்கள். 22செக்கனியாவின் குமாரர்: செமாயா. செமாயாவின் குமாரர்: அத்தூஸ், இகால், பரியா, நெயரியா, சாப்பாத் என்னும் ஆறுபேர். 23நெயரியாவின் குமாரர்: எலியோனாய், இஷ்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர். 24எலியோனாயின் குமாரர்: ஓதாவியா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, அனானி என்னும் ஏழுபேர்.