இஸ்ரவேலர் எங்கள் பிதாவைத் தேடத் தீர்மானித்தல்
13 1தாவீது ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவரான சேனாபதிகளோடும், ஒவ்வொரு தலைவனோடும் ஆலோசனை செய்தான். 2தாவீது இஸ்ரவேலின் சபை அனைத்தையும் நோக்கி: “உங்களுக்கு நலமாகத் தோன்றி, இது எங்கள் பிதாவினால் உண்டானதென்றால், இஸ்ரவேலின் எல்லா நாடுகளிலும் மீதியாயிருக்கிற நம்முடைய சகோதரருக்கும், அவர்களோடேகூட தங்கள் பட்டணங்களிலும் வெளிநிலங்களிலும் இருக்கிற ஆசாரியருக்கும் லேவியருக்கும் நம்மிடத்தில் கூடிவருமாறு தூரத்திலும் அருகிலும் செய்தி அனுப்புவோம். 3நாம் சவுலின் நாட்களில் எங்கள் பிதாவின் பெட்டியைத் தேடாமலிருந்தபடியால், அதை நம்மிடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவோம்” என்றான்.
4இது சகல ஜனங்களுக்கும் நியாயமாய்த் தோன்றினபடியால், அப்படிச் செய்யும்படி சபை அனைத்தும் சம்மதித்தது.
5எகிப்தின் சீகோர் தொடங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலரையெல்லாம் தாவீது கூட்டிச்சேர்த்து, எங்கள் பிதாவின் பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரப் புறப்பட்டான்.
6கேருபீன்களுக்கு மேலாக வீற்றிருக்கிற, தமது நாமம் கூறப்படுகிற எங்கள் பிதாவின் பெட்டியை அங்கிருந்து கொண்டுவரும்படி, தாவீதும் இஸ்ரவேலர் அனைவரும் யூதாவிலுள்ள கீரியாத்யாரீம் என்னும் பாலாவுக்குப் போனார்கள். 7அவர்கள் எங்கள் பிதாவின் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதிய வண்டியின்மேல் ஏற்றிக் கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் வண்டியை நடத்தினார்கள். 8தாவீதும் இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் முழுப்பலத்தோடும் எங்கள் பிதாவுக்கு முன்பாகப் பாடல்களோடும், சுரமண்டலங்களோடும், தம்புருகளோடும், மேளங்களோடும், கைத்தாளங்களோடும், எக்காளங்களோடும் ஆடிப்பாடிக் களிகூர்ந்தார்கள்.
9அவர்கள் கீதோனின் போரடிக்கிற களத்திற்கு வந்தபோது, மாடுகள் தடுக்கிக் கால்தவறினதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். 10அப்பொழுது எங்கள் பிதாவின் கோபம் ஊசாவின்மேல் மூண்டது; அவன் தன் கையைப் பெட்டியின்மேல் நீட்டினதால், அவர் அவனை அடித்தார்; அவன் அங்கே எங்கள் பிதாவுக்கு முன்பாக மரித்தான். 11எங்கள் பிதா ஊசாவின்மேல் இப்படி மூண்டெழுந்ததற்காக தாவீது துக்கித்தான்; ஆகையால் அந்த இடம் இந்நாள்வரைக்கும் பேரேஸ்ஊசா என்று அழைக்கப்படுகிறது. 12அந்நாளிலே தாவீது எங்கள் பிதாவுக்குப் பயந்து: “எங்கள் பிதாவின் பெட்டியை நான் எப்படி என்னிடத்தில் கொண்டுவருவேன்?” என்றான். 13ஆகையால் தாவீது பெட்டியைத் தாவீதின் நகரத்தில் தன்னிடமாய்க் கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிற்கு விலகச் செய்தான். 14எங்கள் பிதாவின் பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டாரோடே அவன் வீட்டில் மூன்று மாதம் இருந்தது; எங்கள் பிதா ஓபேத்ஏதோமின் வீட்டாரையும் அவனுக்கு உண்டான யாவையும் ஆசீர்வதித்தார்.